It

Tuesday, August 26, 2014

முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு பம்மாத்து வாங்கும் சிங்கள முகமூடிகள்…!

முஸ்லிம் பிரச்சினை தொடர்பில் இதற்கு முன்னொரு போதும் இல்லாத அரசியல் பிரச்சினை தற்போது நாட்டில் முளைத்தெழுந்துள்ளது. அளுத்கமவில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான இனவாதப் பிரச்சினையும் அந்தப் பிரச்சினையின் ஒரு கெட்ட செய்தியே. அத்துடன் தற்போது அந்தப் பிரச்சினையானது பல்வேறு விதத்திலும் சமூக அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நாட்டு இலக்கிய, கலாநிலையங்கள் கூட இதுதொடர்பில் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து நிற்கின்றன. அளுத்கம பிரச்சினையானது சர்வதேசத்திற்கு பாரிய தலைப்பாக இல்லாதபோதும் இந்நாட்டில் மாற்றுக் கருத்துடையோராக இருந்தோருக்கு பாரிய இனிப்பாகவும், பல்வேறு தேடல்களின் பால் செல்வதற்கு வழிசமைப்பதாகவும் அமைந்துள்ளது. இந்தக் கட்டுரையை எழுவதன் நோக்கம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி அலசுவதற்காக அல்ல. இப்பிரச்சினையை வைத்துக்கொண்டு, பல ஆண்டுகளாக மாற்றுக்கருத்துடன் மற்றவர்களின் பிரச்சினைகளைக் கண்டு குளிர்காய நினைப்பவர்கள் பற்றி…. அவர்களிடத்து இருக்கின்ற மாற்றுச் சிந்தனைகள் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.


பிரச்சினையின் பின்னணி


மத, தேசிய எல்லையை ஒருபக்கம் நிறுத்திவிட்டு, ஒருபக்கம் சாராமல் மனிதத்துவத்துடன் எடுத்துநோக்கும்போது, பௌத்த கலாசாரம், இஸ்லாமிய கலாசாரத்துடன் ஒத்துப்போகின்ற உலகத்தால் பெரும்பாலும் விரும்பப்படுகின்ற, ஒத்துழைப்பு நல்குகின்ற ஒன்றாகும். அதுவே தெளிவான உண்மையாகும். மாறாக ஏனைய கலாசாரங்களை தப்பெண்ணத்துடன் நோக்கும் தன்மையுடையதன்று. இஸ்லாம் என்பது இயல்பாகவே அடிப்படைவாதத்திற்கு பெரும் பங்களிப்பு நல்குகின்ற, சிந்திப்பதற்கு சிறிதாக இடமளிக்கின்ற, மாற்றங்களுக்கு இலகுவில் இடமளிக்காத ஆக்கிரமிப்புடன் கூடிய கட்டுப்பாடுமிக்கது. என்றாலும் அதனைக் கேட்டவுடனே கலாசார பாரம்பரியம்மிக்க பல நூற்றாண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக யாராலும் செயற்பட இயலாது.  அவர்களின் சுதந்திர இருப்பை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வர். என்றாலும், பல்கூட்டு உலகில் வாழுங்கால் பொதுநலனுக்காக தங்களது கலாசார ஈர்ப்பினை சற்றுத் தளர்த்திக் கொள்வது எந்தவொரு இனத்தினதும் மதத்தினதும் கடமையாகும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.  முஸ்லிம் புத்திஜீவிகள் செய்ய வேண்டிய சரியான வழிமுறை ஏதென்றால், தங்கள் மத விழுமியங்களுக்கும் காலத்திற்கும் ஏற்ப நவீன உலகிற்கு ஏற்ப அர்த்தபுஷ்டியான புதுவிடயங்களை எடுத்துரைக்க வேண்டும். அனைவருக்கும் நன்மை பயக்கின்ற மாற்றுக்கருத்துக்களுக்கு முகங்கொடுக்க முடியுமான முறையிலான அவ்வாறான உள்நுழைவு இஸ்லாமியர்களுக்கு இன்று தேவைப்பாடாகவுள்ளது. 


ஆயினும் இன்று உலகில் நாங்கள் சந்தித்திருப்பது காலத்திற்கு தேவையானதாக அன்றி, படுபயங்கரமான அடிப்படைவாதத்தில் மூழ்கியுள்ள, பயங்கரவாத சக்தியினூடாக மதத்தைப் பரப்புகின்ற, மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புடன் கூடிய இஸ்லாமே. சம்பிரதாய ரீதியிலான முஸ்லிம்கள் கூட அச்சத்திற்குள்ளாகியுள்ள இந்த ஜிஹாத் அடிப்படைவாதமானது இன்று உலகத்தையை தீப்பற்ற வைத்துக் கொண்டிருக்கின்ற படுபயங்கரமான பிரச்சினையாக இருக்கின்றது. மறுபுறத்தில் மேற்கத்தேயம் கூட இந்த பயங்கரவாத அடிப்படைவாத சக்தியை தங்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு சாதமாக பயன்படுத்திவருகின்றது. தங்களது நாடுகளுடன் கைகோர்த்துக் கொள்ளாது தங்களுக்கு எதிராக இருக்கின்ற நாடுகளை குட்டிச் சுவராக்கும் நோக்கத்திற்காக இந்த ஜிஹாத் அமைப்புக்கு கைகொடுகின்றன. இன்னும் சொல்லப்போனால், பல்வேறு திட்டங்களினூடாக செயற்படுகின்ற இதன் ஒரு அங்கமாகவே இலங்கையில் தற்போது கிளர்ந்தெழுந்துள்ள சிங்கள – முஸ்லிம் பிரிவினைவாதத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறன்றி இந்த சிங்கள – முஸ்லிம் பிரச்சினையை அளுத்கமவின் கலவரத்துடன் அல்லது சிங்கள மதகுருமார் பற்றிய காரமான பேச்சுடன் நிறுத்திக் கொள்ளவியலாது.

(தொடரும்... இணைந்திருங்கள்...)

Sunday, August 17, 2014

பண்டிதனாவதற்கு இலகுவழி தேரவாதத்தைத் தாக்குவதே! - பேராசிரியர் நலிந்த சில்வா


ந்தவொரு கலாச்சாரமும் ஏதேனும் ஒரு மதத்திலேயே தங்கியிருக்கின்றது. எங்கள் நாட்டின் பௌத்த கலாச்சாரம் தேரவாத பௌதத்த்தில் தங்கியுள்ளது. தற்போது இலங்கையில் நடந்திருப்பது என்னவென்றால், பண்டிதர்கள் என்று தங்களை இனங்காட்டிக் கொள்பவர்கள் தேரவாத பௌதத்தை தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று பண்டிதர்களாவதற்கு மிக இலகுவழி தேரவாதத்தை தாக்குவதாகும். இன்று தேரவாதத்தை யாரேனும் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கினால் நாளைய நாள் அவர் பண்டிதரே. 

தேரவாதத்தையும், பௌத்த கலாச்சாரத்தையும் தாக்குகின்றவர்களின் சில ஆக்கங்கள் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. அவற்றின் சிங்கள மொழிபெயர்ப்புக்கள் கொஞ்சம் வாசகர்களை மட்டும் கொண்டுள்ள சில சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகின்றன.

இவர்களுக்கு மகாவம்சம் ஒவ்வாது. துட்டகைமுனு மன்னனைத் தூற்றுகிறார்கள். இவர்கள் தற்போது வெளிப்படையாக மகாநாயக்க தேர்ர்களை மட்டும்தான் விமர்சிக்காமல் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு சிலநேரம் சோபித்த தேரர் தேவைப்படுவார். இவர்கள் பொதுபல சேனாவை அடிப்படைவாத இயக்கமாகக் காட்டுகிறார்கள்.

சிலர் மகாவம்சம் சிங்கள பௌத்தர்களின் 4 ஆவது பிடகமாக (திரிபிடகத்தின் ஒரு பிரிவாக) இருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையில் அவ்வாறில்லை.

பிரச்சினை என்னவென்றால், மகாவம்சம் இலங்கைக்கு என்னதான் கொடுத்திருக்கின்றது? என்பதுதான். அந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் இலங்கையிலிருந்த சிங்கள பௌத்தம் பற்றி பேச வேண்டியுள்ளது. அது என்னவென்றால், மகிந்த தேரர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இங்கிருந்தது சிங்கள பௌத்தம். அந்த சிங்கள பௌத்தத்தில் இருந்த கலாச்சாரம் ஏனைய கலாச்சாரங்கள் அனைத்திற்கும் இடமளித்த சிறந்த கலாச்சாரம். கருணை, இரக்கம் எனும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்து கலாச்சாரங்களுக்கும் இடமளித்த கலாச்சாரம். பண்டுகாபய மன்னனின் காலப்பிரிவை எடுத்துக்கொள்ளுங்கள். சகல மதங்களையும் போசித்த அவரது காலப்பிரிவானது, முழுமையாக நீதி நிலைநாட்டப்பட்டது என்பது ஒரு புறமிருக்க, மிகவும் உயர்வான முறையில் நீதி நிலைநாட்டப்பட்டது.

இக்கால கட்டத்தில்தான் விஜயன் உள்ளிட்டோர் இலங்கைக்கு வந்தார்கள். இக்கால கட்டம் பற்றி “வரிக பூர்ணி(க்)காவ என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது.

மானேவே விமலரத்ன தேரர் இந்நூலில் இயக்கர்கள் (அரக்கர்கள்) குலத்தினர் பற்றிய தகவல்களைப் பெற்று, இப்போது நாங்கள் பயன்படுத்துகின்ற மொழியிலேயே எழுதியிருக்கின்றார்.

அரக்கர்களின் “கௌரான” மொழியும் கலாச்சாரமும் அன்றிருந்தது. நாங்கள் தற்போது பயன்படுத்துகின்ற தூய சொற்களும் அந்த மொழியில் இருந்தது. நாங்கள் தற்போது பயன்படுத்துகின்ற “செப்படவிஜ்ஜாவ” போன்ற சொற்கள் அந்தமொழியிலிருந்து பெறப்பட்டதாகவே கருதப்படுகின்றது. (தமிழில் “செப்படிவித்தை” என்ற சொல் இருப்பது இங்கு மனங்கொள்ளத் தக்கது.) அதேபோல, அக்கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்கள் இன்று பயன்படுத்துகின்ற சிங்கள மொழியிலும் கலந்துள்ளன.

அந்தக் காலகட்டத்தில்தான் விஜயன் இலங்கைக்கு வருகின்றான். அப்போது இலங்கையில் பௌத்தம் இருந்தது மட்டுமன்றி, சிலர் அதில் உயர்நிலையும் அடைந்திருந்தனர். 

மகாவம்சம் ரத்னவல்லியை தேவதையாக்குகின்றது. வரலாற்றை நாங்கள் எங்கள் தேவைக்கேற்ப எழுதுகின்றோம். சென்ற பல வருடங்களின் வரலாற்றைக் கூட நாங்கள் எங்கள் தேவைக்கேற்பவே எழுதுகின்றோம்.

விஜயனின் பின்னர் இயக்க கௌராணிக கலாச்சாரத்தில் இல்லாதவை… சிறு ஆக்கிரமிப்பு ஏற்படுகின்றது. அக்காலப் பகுதியில் அதனைத் தற்பாதுகாப்பு எனவும் சொல்லலாம். அதற்கு முன்னர் பழைமையான கலாச்சாரங்கள் எதுவும் இருக்கவில்லை.

விஜயனின் பின்னர் இந்நாட்டுக் கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றமும் முக்கியத்துவமும் அதுவே. வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கள் இந்நாட்டுக்குள் வந்தபோதும் ஆட்டம்காணாது, தென்னிந்தியாவிலிருந்து எவ்வளவுதான் ஆக்கிரமிப்புக்கான தலையீடுகள் வந்தபோதும், காலிங்க மாகனிலிருந்து சேன குத்திக்க, எல்லாளன் போன்றோரின் ஆக்கிரமிப்புக்களுக்கும் நாங்கள் அசையவில்லை. அவ்வாறு அவர்களின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கியிருந்தால் நாங்கள் வைதீக இந்து கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டிருக்கக் வேண்டியிருக்கும்.


மகிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், அவர் கொண்டுவந்த  மூன்றாவது “சங்காயனா” பௌத்த சமயத்தில் இருந்த குறித்ததொரு வகை ஆன்மீகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு இலங்கையில் இருந்த தற்பாதுகாப்பு உதவிபுரிந்தது. சொல்லும் விடயங்களுக்கும் மேலாக தற்காப்பு மிக முக்கியமானது. இந்து, கிறிஸ்தவ மதங்களைப் போல பெரும்பாலும் இல்லாவிட்டாலும் மிகச் சிறியளவில் மகிந்த தேரர் கொண்டுவந்த புத்த சமயத்தில் இந்த குணாம்சங்கள் இருந்தன. இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம், யூத மதங்களில் இருக்கின்ற ஆன்மீகக் கொள்கைகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்புத் தன்மையுள்ளது.


மகிந்த தேரர் புத்த சமயத்தை இலங்கைக்குள் கொண்டுவந்ததும் இந்தக் குணாம்சங்கள் இருந்தன. அறிவின் இலட்சணம் இருந்தது. முகங்கொடுக்க வேண்டும் என்ற குணாம்சம் இருந்தது. தர்மவாதம் உதவி புரிந்தது. விஜயனின் பின்னர் இந்த தற்காப்புக் குணாம்சம் ஏதேனும் ஒருவகையில் உதவிபுரிந்தது. மகாவம்சம் 5 ஆம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டது. அப்போது கிறிஸ்தவ கலாச்சாரம் மடைதிறந்து வரத் தொடங்கியது.

மகாசேன மன்னன் சிங்கள பௌத்த மன்னனாக இருந்து மகாவிகாரையை சீர்செய்து உழுந்து பயிரிட்டார். மகாசேனனின் அரசியல் தோல்வியோடு சிங்கள பௌத்த தேரவாதம் நிலையானது. அங்கு முன்னர் இருந்த சிங்கள பௌத்த கலாச்சாரமும் ஓர் அங்கமாக இருந்தது.

சிங்கள பௌத்த கலாச்சாரத்தில் நூற்றுக்கு 75 – 80 வீதம் சிங்கள பௌத்த இலட்சணங்கள் இருந்தன. ஆக்கிரமிப்புடன் கூடிய தற்பாதுகாப்பு பண்பும் இருந்தது. தற்போது பண்டிதர்கள் போல இருப்பவர்களுக்கு அதனைச் சகிக்க முடியவில்லை.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த போதும், அவர்களால் இந்த கலாச்சாரப் பண்புகளை இல்லாதொழிக்க முடியவில்லை. ஒல்லாந்தருக்கும் முடியவில்லை. ஆங்கிலேயருக்கும் முடியவில்லை.

முஸ்லிம்கள் இலங்கைக்கு 9 ஆம் நூற்றாண்டில் வந்ததாக கதையளக்கின்றார்கள். இது பச்சைப் பொய். அறபிகள் முஸ்லிம்களாவதற்கு முன்னரும் இலங்கைக்கு வந்திருக்கின்றார்கள். எகிப்திலிருந்து இலங்கைக்கு முஸ்லிம்கள் வந்திருக்கின்றார்கள்.

அவர்கள் வியாபாரம் பற்றிக் கற்றுக் கொள்வது போன்ற விடயங்களுக்காகத்தான் இலங்கைக்கு வந்திருக்கின்றார்கள். உண்மையில் இந்நாடு கல்வியில் கேந்திர நிலையமாக அன்று இருந்திருக்கின்றது… நாலந்தா, தக்ஷிலா, மற்றும் பல்கலைக் கழகங்கள் உருவாவதற்கும் முன்னர் இலங்கை கல்வியில் உயரிய இடத்தை எட்டியிருந்திருக்கின்றது. சிலர் இலங்கைக்கு வருகை தந்து இலங்கையில் குடியேறி இருக்கிறார்கள். சீனர்களும்  சேது பாலத்தன் வழியாக வணிகர்களாக இலங்கை வந்திருக்கின்றார்கள். சேது பாலத்தின் வழியில் சீனர்களும் அறாபியர்களும் பண்டமாற்றம் செய்து கொண்டது இலங்கையில்தான். இந்நாட்டுக்கு வருகைதந்த அறேபியர் அந்நாட்டிலிருந்து பெண்களை அழைத்து வரவில்லை. அவர்கள் இலங்கைப் பெண்களைத்தான் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் சிங்கள மொழியைக் கற்றுக் கொண்டார்கள். அவர்களின் பாட்டிமாரும், மாமிமார் எல்லோரும் சிங்களத்தில்தான் கதைத்தார்கள். அவர்கள் தமிழில் கதைக்க வாய்ப்பில்லை. 

அதன் பின்னர் 13 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து தமிழ் பேசக்கூடிய முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்திருக்கின்றார்கள். அவர்கள் இலங்கைக்கு வந்தது போலவே மியன்மாருக்கும் தாய்லாந்துக்கும் சென்றிருக்கின்றார்கள். இவர்களுக்கும் முதலில் இலங்கைக்கு வந்த முஸ்லிம்களுக்கும் இடையே வித்தியாசம் இருந்தது.

இவ்வாறாக இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் பிரதானமாக இரு முறை வந்திருக்கின்றார்கள். இந்த முஸ்லிம்கள் பற்றிய வரலாறு “இலங்கை முஸ்லிம்கள்” என்ற புத்தகத்தை எழுதியுள்ள லோனா தேவராஜா என்ற வரலாற்று ஆசிரியைக்குத் தெரியாது. கருத்துக்களைத் தேடியெடுப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் அவருக்குத் தெரியவில்லை.

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த இந்த முஸ்லிம்கள் ஆரம்பத்தில் அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வந்து சிங்களப் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட முஸ்லிம்களை விட பெரிதும் வேறுபட்டார்கள்.

இந்தியாவில் அன்றிருந்த சில செயற்பாடுகளினாலேயே 13 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்த முஸ்லிம்கள் கலாச்சார செல்வாக்கினை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதனால் ஆரம்பத்தில் சிங்களத்தில் கதைத்து வந்த முஸ்லிம்கள் எல்லோரும் தமிழ் பேசக் கூடியவர்களாக மாறிவிட்டார்கள்.

அவர்கள் வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்கள் சிங்களவர்களாவதற்கோ பௌத்த மதத்தைத் தழுவுவதற்கோ எவ்வித தலையீடுகளும் இருக்கவில்லை.

சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்தேய நாடுகள் சூட்சுமமான முறையில் முஸ்லிம்களை சிங்களவர்களுக்கு எதிராக பயன்படுத்த முனைகின்றது. அதற்கு மேலாக இந்தப் பிரச்சினையை தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பாக்க் காட்டுவதற்கு முழு மூச்சுடன் செயற்படுகின்றது. அதனைத் தவறான எண்ணக்கருத்தாகவே நான் கருதுகின்றேன்.”

இலங்கையில் 253 விகாரைகள் மூடப்பட்டுள்ளதாக ஒரு பத்திரிகையில் நான் படித்தேன். இதுபற்றி யார்தான் கதைத்தார்கள்? பாடசாலைகளை மூடினால் பேசுவார்கள்.

கிராமப்புற மக்கள் தங்கள் பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளுக்கு அனுப்பவதனாலேயே பாடசாலைகள் மூடப்படுகின்றன. விகாரைகள் மூடப்படுவற்குரிய காரணங்கள் வேறு. 253 விகாரைகள் மூடப்பட்டிருப்பதன் அர்த்தம் என்னவென்றால், சிங்கள பௌத்தர்களிடம் இருந்த அந்த தற்பாதுகாப்பு இல்லாமல் போயுள்ளது என்பதே.

ஆனால் முஸ்லிம் பள்ளிவாயல்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் புதிது புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன. இந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் பாரம்பரிய கத்தோலிக்க, எங்க்லிக்கன் எனும் மெதோதிஸ்த தேவாலயங்கள் அல்ல. காளான்கள் முளைப்பது போல எழுகின்ற அமெரிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள். இவ்வாறு பள்ளிவாயல்களும், தேவாலயங்களும் உருவாகும் போது விகாரைகள் மூடப்படுமாயின் ஏதேனும் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கின்றது. கிராமம் கிராமமாக பள்ளிகள் கட்டப்படாதவிடத்தும் கிராமங்கள் பலவற்றுக்கேனும் ஒரு பள்ளிவாசல் எழும்பத்தான் செய்கின்றது.

இப்போது பௌத்தர்கள் என்னதான் செய்கிறார்கள். பௌத்தர்களின் தற்காப்புக் கருதியே மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கின்றார். அதற்காகவே முயற்சிசெய்திருக்கின்றார். இவ்வாறு பௌத்த விகாரைகள் மூடுவதற்கு இடமளித்தால் கடைசியாக எங்களுக்கு புகழ்மிக்க குறித்த சில விகாரைகள் மட்டுமே எஞ்சும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. கிராமத்திலுள்ள விகாரையைப் பாதுகாப்பது தேவைப்பாடாக உள்ளது.

மியன்மார், தாய்லாந்து, லாஓஸ் போன்ற நாடுகளில் போன்ற நாடுகளில் தேரவாத பௌத்தம் நின்று நிலைப்பதற்குக் காரணம், பாதுகாக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் இலங்கையிலிருந்து பௌதத்தை அந்நாடுகளுக்குக் கொண்டுசென்றதனாலாகும். இலங்கையிலிருந்து மன்னர்கள் அந்நாடுகளை ஆக்கிரமித்து பௌதத்தை அங்கு பரப்பவில்லை. போர்த்துக்கேயர் இந்நாட்டில் கத்தோலிக்க மதத்தைப் பரப்பியது போல பலாத்காரமான முறையில் அந்நாடுகளில் பௌத்த மதம் பரப்பப்படவில்லை. எங்கள் தேரவாத பௌதத்தில் இருந்த மகாவம்சம் உறுதிப்படுத்திய தற்காப்பினாலேயே தேரவாதம் இன்று இலங்கையில் நிலைகொண்டிருக்கின்றது.. உலகில் தேரவாதம் நிலை கொண்டிருக்கின்றது.

நான் பொதுபல சேனா உறுப்பினன் அல்லன். என்றாலும் நான் பொதுபல சேனாவினர் அடிப்படைவாதிகள் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. பௌத்தர்களுக்கு இருக்கின்ற தற்காப்புக்கேற்ப பௌதத்தைப் பாதுகாப்பதற்காக குரல் கொடுக்கின்றார்கள். அப்படிக் குரல் கொடுப்பதற்குப் பெயர் அடிப்படைவாதமோ இனவாதமோ அல்ல. எங்கள் மகாவம்சம் இல்லையென்றால் உலகில் தேரவாதமே இல்லை.

சிங்கள பௌத்த கலாச்சாரத்தை இந்நாட்டில் பாதுகாக்க முடியாது விட்டால் எங்கேதான் பாதுகாக்கப்படும் என்றுதான் கேட்க வேண்டும்.

சிங்களத்தில்  - சரத் பெரேரா
தமிழில் - கலைமகன் பைரூஸ்
நன்றி - “சிலுமின”

Wednesday, August 13, 2014

நுண்திட்டமிடல்களுடன் கூடிய ஊடக துவேஷம்பற்றி அறிந்து கொள்ள பாரிய பணிசெய்கிறது “பரிவர்த்தனம்”

சமீப ஆண்டுகளாக இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்கள பெளத்த தீவிரவாத இயக்கங்களும் குழுக்களும் வன்முறைகளை ஏவி வருவது பகிரங்கமான விடயம்.
இந்த வன்முறைகள் பல்வேறு திட்டமிடல்களுடனும் , அதிகார வர்க்க பின்புலத்துடனும் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
இருந்த போதிலும் பொது பல சேனா, ஜாதிக ஹெல உறுமய போன்ற இயக்கம் சார் சக்திகளையும் ஞானசார தேரர், உதய கம்மன்பில முதலிய தீவிரப் போக்கு நபர்களையும் பற்றித்தான் விமர்சனங்கள் கிளம்புகின்றன. இவர்கள் மாத்திரம்தான் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடல்களை செய்கிறார்கள் என்றே பரவலாக நம்பப்படுகிறது. 
இவற்றுக்கு அப்பால் பாரிய ஊடக துவேசம் அல்லது ஊடக வன்முறை ஒன்றும் நுண் திட்டமிடல்களுடன் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் இச் செயற்பாடுகளை மிக அவதானமாகச் செய்யும் பணிகளை முடுக்கி விட்டிருக்கின்றன.
இவ்வாறான செய்திகள், கட்டுரைகள் போதிய அளவுக்கு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வாசகர்களுக்கு கிடைப்பதில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களுடன் ஒருவாரத்தில் சிங்கள ஆங்கில மொழிகளில் மூன்று கட்டுரைகள் வெளி வந்தால் மாதத்தில் ஒரு கட்டுரையைத்தான் படிக்க முடிகிறது. அதுவும் அரிதாக எப்போதாவது.
முஸ்லிம் இயக்கங்கள் சார்ந்து வரும் எங்கள் தேசம், மீள்பார்வை போன்ற பத்திரிகைகளும் சரி நவமணி, விடிவெள்ளி வாரப் பத்திரிகைகளும் சரி இம்மாதிரி முஸ்லிம்களைக் குறிவைத்து வெளிவரும் ஆக்கங்களை மொழிமாற்றம் செய்து தருவதிலும் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுகளுக்கு முறையான பதில் கொடுப்பதிலும் ஆற்றும் பணி மந்தமானதாகவே இருக்கிறது.
ஞானசார தேரரின் பொதுக்கூட்ட உரைகளையும் உதய கம்மன்பிலவின் செய்தியாளர் மாநாட்டின் கருத்துகளையும் மட்டும்தான் தொடர்ச்சியாக தமிழில் அறியக்கிடைக்கிறது. ஆனால் இவர்களது பிரச்சாரங்களைத் தாண்டிய தூண்டுதல்கள் சிங்கள ஆங்கில பத்திரிகைககள் மூலம் சிங்கள பெளத்தர்களை மிக வேகமாக சென்றடைந்து கொண்டிருப்பது தெரிய வருவதுமில்லை, தெரியப் படுத்தப் படுவதுமில்லை.
குறைந்த பட்சம் இவற்றை தெரிந்து கொள்ளுவதற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கான தயார்படுத்தல்களின் போது முன் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு சந்தேகங்களுக்கு பதிலிறுப்பதற்கான சாதக சூழலை அடைந்து கொள்ளுவதற்குமாகவாவது போதிய மார்க்கம் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் கலைமகன் பைரூஸ் தனது “பரிவர்த்தனம்” என்ற வலைப்பூவில் சிங்களப் பத்திரிகைகளில் பிரசுரமாகும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட ஆக்கங்கள் அனைத்தையும் தமிழுக்கு மொழி மாற்றம் செய்து பதிவிடும் பணியைத் துவங்கி இருக்கிறார்.
வாசிப்பை தூண்டக் கூடியதும் புரிதலை இலகு படுத்தக் கூடியதுமான மொழிப் பயன்பாடு, மூலக் கருத்தை சிதைவின்றிக் கொடுப்பதில் காட்டப்பட்டிருக்கும் அவதானம் என்பன சிறப்பாக இருக்கின்றன.
கலைமகன் பைரூஸின் தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்துத் துறையில் உள்ள அனுபவம், சிங்கள மொழியில் உள்ள புலமை, வாசிப்பு தேடல் என்பவற்றின் மீதான தீவிரம் ஆகியன அவரது இந்த முயற்சியின் வெற்றிக்கு பலம் சேர்த்திருக்கின்றன.
இதேபோல் ஆங்கில மொழித் திறனாளர்களும் முயன்று பாருங்கள்.
-எம்.எல்.எம். அன்ஸார்

Saturday, August 2, 2014

எந்த புத்தர்? யாருடைய பௌத்த மதம்?


அது தொடர்ந்து மக்களையும் அவர்களது உடைமைகளையும் அழுக்காக்குகின்ற விஷத்தன்மை வாய்ந்த உசாத்துணை போன்றாகும். (எமில் ஸோலா, “சத்தியம்”.) 

துட்டகைமுனு மன்னன் முதலில் தனது குடும்பத்தினருடனேயே போர் தொடுத்தான். மகாவம்சம் குறிப்பிடுவது போல, தனது இளைய சகோதரன் திஸ்ஸவுக்கு எதிராக போர் தொடுத்தான். தனது முடியைத் தான் தக்க வைத்துக் கொண்டதன் பின்னரே ஏனைய சிற்றரசர்களுக்கு எதிராகவும் கடைசியாக எல்லாள மன்னனுக்கு எதிராகவும் போர் தொடுத்தான். மகாவம்சத்தின்படி இந்த சிவில் யுத்தத்தில் ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியாயின. இங்கு பலியானவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆயினும் தனது சகோதர மதத்தவர்களை கொடூரமாகக் கொன்றொழித்தது தொடர்பில் மகாவம்சம் எதுவும் பேசாமலேயே இருக்கின்றது.

அங்கு துட்டகைமுனு எல்லாளன் போரில் காவுகொள்ளப்பட்ட உயிர்கள் பற்றியே வருந்திநின்றான் எனக் குறிப்பிடுகின்றது. இங்கு பௌத்த தேரர்கள் பின்னடையவோ பயப்படவோ தேவையில்லை என மன்னன் துட்டகைமுனு குறிப்பிட்டுள்ளான்.  “(யுத்தத்தில் ஆட்களை கொன்றதனால்) நீங்கள் இறைசந்நிதானம் செல்லும் வழியில் எவ்வித தடையும் ஏற்படப் போவதில்லை. நீங்கள் ஒன்றரை பேரை மட்டுமே கொன்றிருக்கிறீர்கள். ஒருவர் இறை சந்நிதானத்திற்குச் சென்றவர். அடுத்தவர் பஞ்சமா பாதகங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டவர். மற்றையோர் மார்க்கத்தைப் பின்பற்றாத போலி நம்பிக்கையுடையவர்கள். அவர்கள் மனித மிருகங்களாகவே கருதப்படுகின்றனர்” என்றிருக்கின்றனர். என்றாலும், அவர் பதவி மோகத்தினால் கொன்றொழித்த மக்கள் தொகையை எடுத்துப் பார்க்கும்போது இச்சான்றிதழ் செயலற்றுச் செல்லும். மகாவம்சம், “ஒரு யுத்தத்தில் ஏற்பட்ட மனித உள்வேதனையை ஒரு போலிவேஷமாகவே காண்கின்றது. கொன்றொழிக்கப்பட்டவர்களை மனித மிருகங்களாகவே வர்ணிக்கின்றது. அவர்கள் இறந்ததனால் எவ்விதப் பாவமும் ஏற்படுவதில்லை. அவர்கள் நேரடியாக இறை சந்நிதிக்குச் சென்றுவிடலாம்” என்ற போலி நம்பிக்கையை விதைக்கின்றது. 

இந்த நம்பிக்கையை வலுப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் மகாநாம தேரருக்குப் பின்னணியில் சிலர் இருந்தனர். அவ்வாறு செய்வதற்குக் காரணம் இதுதொடர்பில் புத்தபெருமான் குறிப்பிடும் கருத்துக்கள் நன்கு தெளிவாகின்றமையேயாகும். ஓர் உயிரைக் கொல்வது (அதாவது மனிதனாயினும் விலங்காயினும்) மாபெரும் பாவமாகும். அப்பாவத்திலிருந்து எந்தவொரு முறையிலும் வெளியேற முடியாது.

சங்யுக்த நிகாயவில் காமினி சங்யுக்தவில் வருகின்ற யோதஜீவ சூத்திரத்தில், கிராமத் தலைவனான யோதஜீவ புத்தரிடம் “யுதத்த்தில் மரணிப்போர் தேவலோகம் (சுவனம்) அடைவார்களா?” எனக் கேட்கிறான். புத்தர் யோதஜீவ்வின் வினாவுக்கு மூன்று முறை பதிலளிக்காமல் மௌனம் காக்கிறார். மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் காரணமாக கீழ்வருமாறு பதிலளிக்கிறார் புத்தர். 

“யுத்தத்தில் எதிரியைத் தாக்குவதற்கு முற்படுகின்றவனுக்கு எதிரியைக் கொன்றொழிக்க வேண்டும், வெட்ட வேண்டும், அழித்தொழிக்க வேண்டும் என்ற சிந்தனையே இருக்கும். அவ்வேளை எதிரியைத் தாக்கிக் கொன்றொழித்தால் அவர் மீண்டும் நரகத்தில்தான் பிறப்பார்…” யுத்தத்தில் இறப்போருக்கு நடப்பது இதுதான். இதில் எவ்வித மாற்றமோ சிறப்போ கிடையாது. புத்த சமயத்தைக் காப்பதற்காக இறந்துபோவோர் சுவனத்தை அடைவர் என புத்தர் ஒருபோதும் சொல்லவில்லை. 


மாற்றமுடியாத இந்த இயற்கை நியதி மகாநாம தேரருக்கும் அக்காலத்தில் இருந்த தாதுசேன மன்னனின் இராஜதந்திரங்களுக்குப் பொருந்துவதாக இல்லை. தாதுசேன மன்னன் மகாநாம தேரரின் பக்தனும் மருமகனுமாவான். மாமன் மருமகனை தன் கெட்ட காலத்திலேயே தன்னுடன் இணைத்துக் கொண்டான். இலங்கை 30 வருடங்கள் பாண்டியர் வசம் மண்டியிட்டிருந்தது. கடைசி பாண்டிய அரசனைத் தோற்கடித்தே தாதுசேனன் ஆட்சிக்கு வந்தான். யுத்தத்தில் ஆட் பலி நடக்கும். சிலவேளை தாதுசேன மன்னனின் கரங்களால் ஆரம்ப தம்ம பதம் முழுமையாக சிதைக்கப்படலாம். அவனது படைவீரர்கள் மரணத்தின் பின்னரான வாழ்க்கை பற்றி சிந்தித்திருக்கலாம். இந்நேரம் மகாநாம தேரர் எதிரேவந்து, “பாவமில்லா யுத்தம்” என்ற பொய்யை உருவாக்கி மன்னனையும் அவனது படையினரையும் உற்சாகப்படுத்தியிருக்கலாம்” என்று கருதுவதில் பிழையில்லை. அது அவர்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே…

இந்தக் கருத்தானது வெளிக்கொணரும்போது, மகாநாம தேரர் நிச்சயம் சந்தோசித்திருப்பார். அவர் புத்தரின் போதனைகைளை முற்றுமுழுதாக தலை கீழாக மாற்றி, முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான புத்த சமயத்தை நிர்மாணித்ததோடு, அது 15 நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியல் வழிநடாத்துவதற்கும் காலாக அமைந்துள்ளது.

“நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிருந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.   
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்த்து…!”  

யாழ்ப்பாண நூலகம் தீப்பற்ற வைக்கப்பட்டது பற்றி பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் எழுதிய சிறந்த கவிதை அவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. புத்தரை அவ்வாறு ஏன் கொன்றனர்? என அமைச்சர்கள் கேட்கும்போது பொலிஸார்,

“இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுட முடியாது போயிற்று” என்கின்றனர்.

உண்மைதான். ஆயினும் உண்மையில் 6 ஆம் நூற்றாண்டில்தான் புத்தர் கொலை செய்யப்பட்டார். மகாநாம தேரர் புத்த சமயத்தை புதிதாக எழுதியது மட்டுமன்றி, அது யுத்தம் சார்ந்த புத்த சமயத்திற்கு பொருந்தக்கூடிய புதிய யுத்தம்சார் புத்தனையும் உருவாக்கியது. மகாவம்ச புத்தர் கௌதம (சித்தார்த்த) புத்தரில் முற்றிலும் மாறுபட்டவர். 

திரிபிடகத்தில் வருகின்ற புத்தர் போலன்றி, மகாவம்சத்து புத்தர் தந்திரத்துடனும், பெரும் மனித பலத்துடனும் எதிரிகளை சுற்றிவளைப்பவராக இருக்கின்றார். அவர் புத்த  பெருமானைப் போல அனைத்து உயிரினங்களுக்கும் அன்பும் கருணையும் காட்டுபவரல்லர். மகாவம்ச புத்தர் பிணைப்புக்களுடையவர். அவருக்குத் தேவையாக இருந்தது என்னவெனில், தனது சமயம் பாதுகாக்கப்படுகின்ற இலங்கையைக் கட்டிக் காப்பதாகும். இவ் அரசியல் திட்டத்தில் கடவுளர்கள் அவரது நண்பர்களாவர். அக்கிரமக்காரனான விஜயன் அவருக்கு அடிமைப்பட்டவர். இலங்கையின் ஆரம்பகால அரக்கர்கள் அவரது எதிரிகளாவர். மகாவம்சத்தில் வருகின்ற புத்தர் உண்மையான புத்தர் ஒருபோதும் செய்யாதவற்றைச் செய்பவர். இலங்கைக்கு வந்து இயக்கர்களுக்கு தர்மோபதேசம் செய்வது ஒருபுறமிருக்க அவர்களை விரட்டியடித்தவர்.  திரிபிடகத்திலுள்ள புத்தர் அரக்கர்களை - இயக்கர்களை விரட்டியடிக்கவில்லை, அவர்களை எதிரிகளாக நினைக்கவில்லை. “யக்ஷ சங்யுக்த”வில் புத்தர் ஆலவக எனும் அரக்கனை (பிசாசு) தன் பொறுமையினாலும், நீதியினாலும், நற்போதனைகளினாலுமே தன்வயப்படுத்துகின்றார்.

மற்றொரு அரக்கனான சீவக(ன்), அனாத்தபிண்டிக்க எனும் பிரபுவிடம் சென்று புத்தரைச் சந்திக்குமாறு மும்முறை வேண்டியிருக்கின்றான். இதுஇவ்வாறிருக்க, மகாவம்சத்தின்படி தமிழர்கள் பிற்காலத்தில் வர்ணிக்கப்பட்டது போன்று அரக்கர்களும் பிறப்பிலேயே கெட்டவர்கள். மகாவம்சத்தில் வருகின்ற புத்தர் மழை, புயல், இருள் என்பவற்றைத் தோற்றுவித்து அவர்களைப் பயமுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்து அவர்களை புனிதி பூமியினின்று விரட்டியடித்துள்ளார்.

தற்கால இலங்கையில் சிவில் சமூகத்தினரிடையே சமாதானத்தை உருவாக்க முடியாமலிருப்பதற்குக் காரணம் உரிமையாளர்கள் - வெளியார் என்ற எண்ணக்கருவேயாகும். பௌத்தர்கள் இலங்கை தீவின் தனியுரித்துடையவர்கள் எனவும், மற்றோர் வெளிநாடுகளிலிருந்து) இலங்கைக்கு வந்தவர்கள் எனவும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டினுள் எவ்வித அதிகாரமுமில்லை.. உரிமையுமில்லை. இந்த கருத்துக்கூட மகாவம்ச பொய்யினால் வடிவமைக்கப்பட்டதாகும். மகாவம்சத்திற்கேற்ப, புத்தபெருமான் தனது மரணப்படுக்கையில் தனது மார்க்கமானது அழிவுறாமல் இருப்பது இலங்கையிலேயே என்பதால் அதனை மிகவும் கவனத்துடன் பாதுகாக்குமாறு கடவுளர்களிடம் வேண்டியுள்ளார். புத்தரின் இறுதிக் காலகட்டத்தில் சில நாட்கள் பற்றி “மகாபரினிப்பான சூத்திரத்தில் தெளிவாக்க் கூறப்பட்டுள்ளது. ஆயினும், அங்கு எந்தவொரு இடத்திலும் இவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்படவில்லை என்பதைக் காணலாம்.

தனது சமயம் பரிசுத்தமாக பாதுகாக்கப்படுவது இலங்கை எனும் இந்த சிறிய தீவில்தான் என புத்தர் ஒருபோதும் சொல்லவில்லை. அதனைப் பாதுகாக்குமாறு ஒருபோதும் எந்தவொரு கடவுளையும் வேண்டவுமில்லை. கடவுளர்களிடம் பொறுப்பேற்குமாறு கூறியது மகாவம்சம் இட்டுக் கட்டிய மற்றொரு பொய்யாகும்.

யோதஜீவ சூத்திரத்தில் புத்தரின் பதிலைக் கேட்டு யோதஜீவ அழத் தொடங்கினார். அவர் பொய்யாகத்தான் அழுகிறார். அதற்குக் காரணம், பொய்யான வழிகாட்டல்கள் மூலம் யுத்தத்தில் இறப்பவர்கள் சுவனம் செல்வர் என்ற தவறான வழிகாட்டலில் அவரும் நீண்டகாலமாக வழிகாட்டப்பட்டதை நினைத்தே அவர் அழுகிறார் என புத்தர் சொன்னார்.

மகாநாம எனும் அரசியல் தேரர் மகாவம்சத்தை எழுதி 15 நூற்றாண்டு உருண்டோடிய போதும், மஹானாம எனும் தேரர் மஹாவம்சத்தை எழுதி 15 நூற்றாண்டுகள் கழிந்துள்ள போதிலும் அவரது இல்லற துறவற சீடர்களால் நாங்கள் இன்று ஏமாற்றப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் உள்ளோம்.

மகாவம்ச புத்த சமயம், இலங்கை பௌத்தர்களின் புனித பூமி எனவும், பௌத்தரல்லாத ஏனையோ யுத்தம் செய்து கொன்றொழிப்பதில் குற்றமில்லை எனவும் குறிப்பிடுகின்றது. இந்தப் பொய்யினால் இங்கு பெரும்பான்மை, சிறபான்மை ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்துள்ளனர். எங்களது வரலாறு, அரசியல், புத்த சமய மகாநாம தேரர் மற்றும் அவரது சீடர்கள் சோடித்த இந்தப் பொய்யினால் மீட்டெடுக்கும் வரை இலங்கையில் சமாதானத்தை மலரச் செய்யவே முடியாது.


தமிழில் - கலைமகன் பைரூஸ்