மகிந்தவுக்கு
மூன்று முறை முடியுமா? இன்று அரசியல் வட்டாரத்தில் நிலைகொண்டுள்ள தலைப்பு இதுதான்.
ஜனாதிபதித் தேர்தல் போன்ற நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க வேண்டிய காலப்பகுதியில்
ஏற்பட வேண்டிய கொள்கைகள், எதிர்கால நோக்கு முதலியன பற்றி கடந்த சில மாதங்களாக
பேச்சுக்கள் அடிபடுகின்றன. முக்கியமாக சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அரசியலில் புதுமுகமாக இணைந்துகொண்ட சரத் பொன்சேக்கா “பொது வேட்பாளர்” பலகை
தொங்கவிடப்பட்டு அரசியலுக்குள் தள்ளிவிடப்பட்டார். அந்த அரசியல் விகாரத்தின்
மற்றொரு தொடர்ச்சியாக “மும்முறை முடியாது” என்ற நீளமான பேச்சு சப்பை போடு
போட்டுள்ளது ஆச்சரியமானதன்று!
சிலர்
மேற்கத்தேயத்தின் தீமைகளைச் சொல்லிக் கொண்டிருக்க, மற்றும் சிலர் மேற்கத்தேயத்தைப்
போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்க மேற்கத்தேயத்திலோ இவ்வாறான விடயங்களைக்
காணவியலாது. முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இவ்வாறான வரலாற்று
முக்கியத்துவம் மிக்க தேர்தல் ஒன்றின்போது அந்நாடுகள் முக்கியத்துவம் கொடுப்பது நாட்டில்
வளர்ச்சி பற்றிய தூரநோக்கிற்கே. அவ்வாறான்றி இவ்வாறான சில்லறைப் பிரச்சினைகள்
பற்றி துளியும் கருத்திற் கொள்ளாது. ஊடகங்களும் அதனோடு ஒட்டிய ஏனைய துறைகளும் நாட்டின்
எதிர்காலம் பற்றி தூரநோக்கையே தங்களது பிரதான செய்திகளாகக் கொள்ளும். பெரும்பாலும்
இவ்வாறு இடையில் சொருகிக் கொண்ட தலைப்புக்களுக்குப் பதிலாக பொருளாதார நிலை,
பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வெளிநாட்டுத் தொடர்புகள் போன்ற துறைகளுக்கு
முக்கியத்துவம் அளிப்பதை சுட்டிக் காட்டவியலும்.
என்றாலும்
துரதிர்ஷ்டவசமாக எங்களில் எவரோ வடிவமைத்துத் தருகின்ற ஒரு குறித்த நேரத்திற்கு
மாத்திரம் பொருந்துகின்ற தலைப்பில் நாங்கள் சிறைப்பட்டிருக்கின்றோம்.
சரத் என் சில்வாவின் வாதம்
(தொடரும்... இணைந்திருங்கள்)
தமிழில் - கலைமகன் பைரூஸ்
0 comments:
Post a Comment