It

Saturday, January 17, 2015

கவிஞன்!

அவன் யார்?
நான் கேட்கிறேன்.
அவன் ஒரு பைத்தியம்.
அவர்கள் சொன்னார்கள்.
அவன் ஒரு பைத்தியம்?
நான் கேட்கிறேன்.
ஆம், அவன் பாதிப்பில்லாத
ஓர் ஏழைப் பைத்தியம்.
அவர்கள் சொன்னார்கள்.
அவன் ஒரு விநோதமானவன்,
உங்களுக்குத் தெரியுமா?
அவன் சதாவும்
தன்னுடன் தானே
பிதற்றிக் கொள்வான்.
அவர்கள் சொன்னார்கள்.
அவன் காற்றையும்
மேகங்களையும் பற்றிப்
பேசுவான்.
அவன் மலைகளையும்
பூக்களையும் பேசுவான்.
அவன் மிகவும்
விநோதமானவன்.
அவனைச் சுற்றி
என்னதான் நடக்கின்றது
என்று அவன் அறியான்!
ஆனால் அவன்
நட்சத்திரங்களையும்
சந்திரனை சூரியனைப்
பேசுவான்.
அவன் உன்னைப் பற்றி
பேசினானா என
நான் கேட்டேன்.
ஆம்...
அவன் எங்களைப் பற்றி
பேசவில்லை.
உன்னைப் பற்றியும்
ஏனையவர்கள் பற்றியும்
ஒருபோதும்...
அவன் பேசாத
ஏதும் உள்ளதா?
நான் கடைசியாகக் கேட்டேன்.
அவர்கள் சொன்னார்கள்.
ஆம்,
சில விடயங்களை
பற்றிப் பேசுவான்.
அந்த ஏழைப் பையன்.
மீண்டும் அவன்
அவனைப் பற்றியே
ஏதோ பிதற்றுகிறான்.

-பிரகாஷ் சுபேதி (நேபாளக் கவிஞர், எழுத்தாளர்)
ஆங்கில வழி தமிழில் - கலைமகன் பைரூஸ்
16.01.2015
<<<<Prakash Subedi’s first collection of poems, Stars and Fireflies, was published recently. Subedi, who is affiliated with the Aarohan Gurukul Theatre and the Society of Nepali Writers in English (NWEN), currently teaches at the Dillibazaar Kanya Campus. V.E.N.T! Magazine met up with this budding poet to hear his perspective on literature, life and poetry.>>>>

0 comments:

Post a Comment