It

Wednesday, August 5, 2015

புனித குர்ஆன் மீது அபாண்டமான குற்றம் சாட்டு!

தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களை நசுக்கின்றனர் என சிங்களவர்களை மூளைச்சலவை செய்வதில் தீவிரம் காட்டும் சுசந்த ரணதுங்க!

சிங்கள மக்கள் தமிழ் - முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதற்காக அநுராதபுரத்திலிருந்து பொதுபல சேனாவின் அரசியல் கட்சியான பொதுஜன பெரமுணவிலிருந்து போட்டியிடுகின்ற சுசந்த ரணதுங்க சிங்களவர்களை மூளைச் சலவை செய்துவருகின்றார். அவரது பேட்டி சிங்களவர்களுக்கு மத்தியில் வெகுவேகமாக சமூக வலைத்தளங்களின் மூலம் சென்றுகொண்டிருக்கின்றது.

“பரிவர்த்தனம்” வாசகர்கள் அவரது நச்சுக்கருத்துக்கள் அடங்கிய சிங்கள பேச்சின் தமிழ்பெயர்ப்பை இங்கே முழுமையாகப் படிக்கலாம். தமிழ் - முஸ்லிம்கள் அதிகமதிகம் இந்தச் செய்தியின் மூலம் விளிப்படையச் செய்ய தங்களால் ஆன பங்களிப்பைச் செய்யவும்... பகிரவும்.. அவதானமாக இருக்கவும்.

அவரது நச்சுக்கருத்துக்களின் பெயர்ப்பு -

அன்புக்குரிய சிங்களவர்களே!

இது நாம் விளித்துக் கொள்ள வேண்டிய காலம்! எந்நேரமும் சிந்திக்க வேண்டிய காலம்!

சிங்களவர்களின் சிங்கள தேசம் 1500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இந்த சிங்கள நாட்டில் இன்று சிங்களவர்களுக்கு என்ன நடந்திருக்கின்றது? வில்பத்தில் 600 ஏக்கர்களை ரிஷாத் பதியுத்தீன் கைப்பற்றியிருக்கின்றார். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் ரவூப் ஹக்கீம் அவர்களுக்குத் தனியானதொரு மாகாணம் கேட்கும்போது வடக்கில் விஜயகலா மகேஷ்வரன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அங்கிருக்கின்ற பொலிஸாரை முழுமையாக அனுப்பிவிடுவதாக உரத்துச் சத்தமிடுகின்றார். பிரபாகரனின் மைத்துனன் சிவாஜிலிங்கம் குருணாகலையில் போட்டியிடவுள்ளார். அநுராதபுர சிங்களவர்கள் மரக்கலயர்களுக்கும் (முஸ்லிம்களுக்கும்) தமிழர்களுக்கும் அகப்பட்ட சிறைக்கைதிகளாக இருக்க வேண்டிய நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது. 2500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சிங்கள இனத்திற்கு இன்று இந்நிலையே ஏற்பட்டிருக்கின்றது.

அன்புக்குரிய சிங்கள மக்களே!

சிந்திக்க வேண்டியதொரு காலம் உள்ளது. மிகக் குறுகிய காலம். முஸ்லிம்களின் குர்ஆனில் இருக்கும் விடயம் உங்களுக்குத் தெரியுமா? அந்த குர்ஆனில், ஏதேனும் ஒரு நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை நூற்றுக்கு ஐம்பதைத் தாண்டினால் ஏனைய அனைத்து மக்களும் முஸ்லிம்களாக மாற வேண்டும். முஸ்லிம்களாக மாறாதவர்களை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அல்லாஹ்வின் ஆணை.

இலங்கையில் கடைசியாக கணிக்கப்பட்ட சனத்தொகைக் கணிப்பீட்டின்படி பௌத்தர்கள் 69.5 வீதம் காணப்பட்டனர். தற்போது மிக மிகக் குறுகிய பதினொரு ஆண்டுகளுள் இந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 62 வீதத்திற்கும் குறைவாக உள்ளது. மீதியுள்ள நூற்று 7 அல்லது 8 வீதம் முஸ்லிம்களாக மாறுவதற்கு இன்னும் 10 அல்லது 15 எனும் குறுகிய காலம் மட்டுமே.

என் அன்புக்குப் பாத்திரமான பெற்றோர்களே…

ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.. உங்கள் அன்புக்குரிய மகள் அல்லது சகோதரி “புர்கா” எனும் கறுப்பு ஆடைக்குள் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் புகுந்து கொண்டு முழு உடம்பையும் மறைத்துக் கொண்டு ஒரு மரக்கலயனின் பின் செல்லும் நான்கு பெண்களுள் ஒரு பெண்ணாக இருப்பதற்கு. நீங்கள் இதனை விரும்புகின்றீர்களா? அவ்வாறு விரும்புவதாயின் சிங்களவர்களைக் காட்டிக் கொடுங்கள். 

சிங்களவர்களல்லாத எவனுக்கேனும் உங்கள் வாக்குகளை அளியுங்கள்.
இம்முறை அநுராதபுரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சி, நிறக் கண்ணாடி எதுவாயினும் எக்கொள்கைகளுடன் இருந்தாலும் சிங்களவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டிய காலமே மலர்ந்துள்ளது. எனவே ஒன்றாக – ஒரே சிந்தையுடன் நினைத்துப் பாருங்கள்… 

சிங்களவர்களைத்தான் வெற்றிபெறச் செய்ய வேண்டும். யார் எந்தக் கட்சியிலிருந்து போட்டியிட்டாலும் பரவாயில்லை. சிங்களவர்களுக்காக குரல் கொடுக்கவும். நீங்கள் அவ்வாறு வாக்களிக்க வேண்டிய ஒரே ஒரு சிங்களக் கட்சி எதுவென்றால் அதுதான் பொதுபலசேனாவின் “பொதுஜன பெரமுண” அதுதான் சிங்களவர்களுக்காக குரல் கொடுக்கவுள்ள ஒரே கட்சி. எனவே பொதுஜன பெரமுணவுக்கு உங்கள் உதவிக் கரங்களை நீட்டுங்கள். உங்களுக்காக செத்து மடியவும் நான் தயார். எனவே, அநுராதபுரத்திலிருந்து பொதுஜன பெரமுணவிலிருந்து போட்டியிடும் சுசந்த ரணதுங்க 4 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழில் - கலைமகன் பைரூஸ்



1 comments:

  1. இவனைப் போன்ற நச்சுக்கருத்துக்கள் உடையவர்கள் விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எல்லாச் சிங்களவர்களும் இவனைப் போன்றவர்கள் அல்லர் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

    ReplyDelete